Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சென்னைப் பல்கலைக் கழகத்தில் “கலைஞர் சிந்தனைகள்” என்ற பிரிவில் பட்ட மேற்படிப்பு!!!

இந்தியாவின் தொன்மையான பல்கலைக் கழகமான சென்னைப் பல்கலைகக் கழகம், பெரியார் சிந்தனைகள், அண்ணா சிந்தனைகள், கலைஞர் சிந்தனைகள் என்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுவருகிறது.

காந்திய சிந்தனைகள் மற்றும் அம்பேத்கார் சிந்தனைகள் போன்ற கற்கை நெறிகள் ஏற்கனவே பல பல்கலைக் கழகங்களில் எம் ஏ பாட திட்டத்தில் இருப்பதாகவும், அதே போல தற்போது இந்தப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திருவாசகம் அவர்கள் தெரிவித்தார்.

ஆனால்  கருணாநிதி  பற்றிய விமர்சனங்கள் இந்தப் பாடத்திட்டத்தில் இருக்காது என்றும், பிற தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகளை ஒட்டிய முதுகலைப் பட்டங்கள் வரும் ஆண்டுகளில் துவக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version