Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுவிஸிலிருந்து மூன்று தமிழர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்

சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட மூன்று இலங்கைத்தமிழர்கள், இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (27-07-2012) இலங்கையின் கட்டுநாயக்கா விமானநிலையத்தினை, நாடுகடத்தப்பட்ட மூவரும் சென்றடைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பபடும் இலங்கையர்கள் , சித்திரவதைகளையும் அச்சுறுத்தல்களையும் சிறிலங்காவில் எதிர்கொள்கின்றனர் என பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்து வருகின்றன.
புலம் பெயர்நாடுகளில் உறுதியான எதிர்ப்புகள் எதுவும் அற்ற நிலையில் அரசுகள் எந்த தயக்கமும் இன்றிநாடுகடத்தல் நடவடிக்கைகளை இன்னும் அதிகமாகத் தொடரும் நிலையே காணப்படுகின்றது.

Exit mobile version