Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகம் மின் நிலையத்திலிருந்து அழிப்பு நடத்தும் நிறுவனம் மூடப்படவில்லை

chunnagamஎம்ரிடி வோக்கஸ் நிறுவனத்தின் உப நிறுவமனாம நோர்தன் பவர் நிறுவனத்தின் கழிவு எண்ணெய் கசிவு தொடர்பில் பிரச்சினைக்குள்ளான இந்நிறுவனத்தை மூடும்படி எந்த அறிவித்தலும் வரவில்லை என்று இந் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி லால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தங்களது நிறுவனத்தினை மூடும் படி தமக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை அதனால் நிறுவனத்தின் பணிகள் தொடர்ந்தும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

கிராண்ட ஒரியன்டல் ஹோட்டலில் இன்று நடாத்திய விசேட ஊடகலியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

சுற்றுச் சூழலை நச்சாக்கித் திட்டமிட்டு அழிக்கும் இந்த நிறுவனம் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் ஒரு பகுதியா என்ற சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்த நிறுவனத்தின் பின்னணியில் செயற்படும் கிரிமினல்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்த அழிப்பிற்கு எதிராகப் போராடிவருகிறார்கள்.

சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்

Exit mobile version