Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீ.ஐ.ஏ திட்டமிட்டுக் கொலைசெய்த சே இன் மரணத்தின் பின்னான புகைப்படங்கள் வெளியாகின

che1அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் வசிக்கும் பிலிக்ஸ் ரொட்ரிகேஸ் முன்னை நாள் சீ.ஐ.ஏ உளவாளி. கியூபாவில் பிறந்தவரானாலும் சீ.ஐ.ஏ இன் ஏஜண்டக தனது 20 வது வயதிலேயே இணைந்துகொண்டவர். பொலீவியாவில் மக்கள் மத்தியில் புரட்சிக்கான தயாரிப்புக்களை மேற்கொண்டிருந்த சே குவேராவைப் பிடித்துக் கொலை செய்வதற்காக சீ.ஐ.ஏ இனால் அனுப்பப்பட்ட முகவர்களில் இவர் முக்கியமானவர். ஆர்ஜன்டீனாவின் இராணுவ அரசிற்கு ஆலோசகரகக்கூட ரொட்ரிகேஸ் வேலை பார்த்திருக்கிறார்.

2007 ஆம் ஆண்டு பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தனது நடவடிக்கைகளை பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறார்.

இன்று சே குவேரா கொலை செய்யப்பட்ட பின்னர் புகைப்படம் பிடிக்கப்பட்ட உடல் வெளியாகியுள்ளது. இன்னும் உயிர்வாழும் ரொட்ரிகேஸ் போன்ற சே இன் கொலையாளிகள் அவற்றை ஊடகங்களில் பார்த்துக்கொண்ட்ருப்பார்கள்.

சே கொல்லப்படுவதற்கு சற்று முன்னபதாக பிலீக்ஸ் ரொட்ரிகேஸ் உடன்

ஒக்ரோபர் மாதம் 9 ம் திகது 1967 ஆம் ஆன்டு சே சீ.ஐ.ஏ இன் உதவியுடன் பொலீவியன் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட பின்னர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பிரஞ்சு ஊடகவியலாளர் ஒருவர் சே குவேராவின் கொல்லப்பட்ட உடலைப் புகைப்படம் பிடித்துள்ளார். அப் புகைப்படங்கள் பொலீவியாவில் கிறீஸ்தவ மிஷனரி ஒன்றில் வேலைபார்த்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லூயி குவேட்டேரோ என்பவரின் கைகளுக்கு இடம்மாறியுள்ளது. பின்னதேக 1967 ஆம் ஆண்டி நவம்பர் மாதம் ஸ்பெயின் உள்ளூராட்சிச் சபை ஒன்றின் உறுப்பினராகவிருந்த இமானோல் ஆர்டியாகா என்பவர் குவாட்டேரோவின் மரணத்தின் பின்னர் அவரது உடமைகளுக்கு மத்தியிலிருந்து கண்டெடுத்துள்ளார்.

ஆர்ஜன்டீனாவில் பிறந்த மருத்துவரான சே குவேரா பிடல் கஸ்ரோவுடன் இணைந்து கியூபாவில் புரட்சியை நடத்தியவர். தனக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவியைத் துறந்து ஏனைய நாடுகளில் புரட்சியை நடத்துவதற்காகப் பயணித்தவர். பொலீவியாவில் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையில் சீ.ஐ.ஏ இனரால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.

சே குவேராவைக் கைது செய்து அதன் பின்னர் கொலை செய்த ஆதாரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. இக் கொலைகளை பொலீவியன் இராணுவமும், அமெரிக்க உளவுத்துறையும் இணைந்து நடத்தியதாக உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், முப்பது வருடங்கள் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் பிரசவித்த புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சே கொல்லப்பட்டது கியூபா இராணுவத்தால் எனப் பிரச்சாரம் மேற்கொள்கின்றன.

கைதான அரசியல் கைதியைக் கொலை செய்தமைக்காக போர்க்குற்றத் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய கைதிகளைக் காப்பாற்றும் தமிழ் ஊடகங்கள் எமது சமூகத்தில் அவமானத்தை மட்டுமே விட்டுச் செல்கின்றன.

Exit mobile version