Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீனாவின் சட்ட விரோத சிறைகள் மூடப்பட வேண்டும்:HRW

சீனாவில் செயற்பட்டு வரும் நூற்றுக் கணக்கான சட்ட விரோதமான சிறைச்சாலைகள் மூடப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது.

இந்தச் சிறைச்சாலைகளில் அடிக்கடி மக்கள் அடைக்கப்பட்டு உடல் மற்றும் உள ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்ளூர் குறைகள் குறித்து தலைநகர் பீஜிங் மற்றும் பல நகரங்களில் உள்ள அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தவர்களே இவ்வாறு அரசின் உளவாளிகளால் கைது செய்யப்பட்டு, இந்தச் சட்டவிரோத சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.

சீனாவின் ஒரு பகுதியிலிருந்து பெருமளவில் மனுக்கள் வருமாயின் அந்தப் பகுதியில் இருக்கும் உள்ளூர் அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கப்படும் நிலையில், இப்படியான வகையில் செயற்படுவதன் மூலம், அந்த அதிகாரிகள் தண்டனைகளில் இருந்து தப்பிக்கிறார்கள் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் இப்படியான சட்ட விரோத சிறைச்சாலைகள் செயற்படுவதை சீன அரசு மறுத்து வருகிறது.

Exit mobile version