Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீக்கிய வம்சாவளி பிரித்தானியரைத் தாக்கிய வெள்ளையினப் பெண்

பாதுகாப்பு கருவிகளில் பதிவாகியுள்ளத தாக்குதல்
பாதுகாப்பு கருவிகளில் பதிவாகியுள்ளத தாக்குதல்

கொவென்றி நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் ஒருவரை 19 வயது இளம் பெண் தாக்கியுள்ளார். கடந்த பத்தாம்திகதி காலை இந்தச் சம்பவம் நடைபெற்றது. இப்போது சமூக வலைத் தளங்களில் அதற்கான காணொளிகள் வெளியிடப்பட்டன. 80 வயதான ஓய்வூதியம் பெறும் பிரித்தானிய வாசியான தாக்குதலுக்குள்ளானவர், கொவன்றியில் நீண்டகாலமாக வசித்து வருகிறார். தாக்குதலில் அவருக்கு மூக்கில் இரத்தம் வடிந்தது. கண்களின் மேல் கறுப்புப் படர்ந்து காணப்பட்டது. இது அருவருப்பு, விரும்பத்தகாதது என்ற வார்த்தைகளால் திட்டிபடி அடித்துள்ளார். இந்தப் பெண் இப்போது கைதாகியுள்ளதாக போலிஸ் அறிவித்துள்ளத்து. பிரித்தானிய எங்கும் அதிகரித்து வரும் நிறவாதமும், வன்முறைகளும் அரசாலும் ஒரு எல்லை வரை தூண்டிவிடப்படுகிறது. ஆங்கிலேயர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பிரித்தானிய தேசியவாதக் கட்சி ஆகியவற்றின் வெளிப்படையான நிறவாதக் கருத்துக்கள் பிரித்தானிய இளைஞர்கள் மத்தியில் நச்சை விதைத்துவருகிறது.

Exit mobile version