Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சி.பி.எம் அலுவலகம் மீது பாட்டாளி மக்கள் கட்சியினர் தாக்குதல்.

தோழர் வரதராஜன் தற்கொலை தொடர்பாக மக்கள் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியதைத் தொடர்ந்து இன்று காலை மக்கள் தொலைக்காட்சி முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்ஸ்சிஸ்ட் கட்சியினர் மக்கள் தொலைக்காட்சியின் அலுவலகத்தில் கற்களை வீசித் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் அலுவலக கண்ணாடிகள் சேதமடைந்ததோடு பல ஊழியர்களும் காயமடைந்தனர். இந்நிலையில் சென்னை திநகரில் இருக்கும் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குள் நுழைந்த பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் அந்த அலுவலகத்தை தாக்கி சேதப்படுத்தினர். கட்சியின் அலுவகப் பொருட்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அலுவலக ஊழியர்கள் காயமடைந்தது தொடர்பான செய்திகள் எதுவும் தெரியவில்லை. இரு இடங்களிலும் தாக்குதலுக்குப் பின் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version