Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறுவனின் மரணத்தைக் கண்டித்து போராட்டம்:பொலிஸார் கண்ணீர்ப்புகை,தடியடி!

இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஒரு சிறுவனின் மரணத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்கு இந்திய நிர்வாகத்தில் உள்ள பொலிஸார் தடியடிப் பிரயோகமும், கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் செய்திருக்கிறார்கள்.

காஷ்மீரின் கோடைகாலத் தலைநகரான சிறிநகரில் இந்திய ஆட்சியை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது இந்த 16 வயதுப் பையன் கடுமையான காயங்களுக்கு உள்ளானான் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.

பின்னர் அந்தச் சிறுவன் மருத்துவமனையில் மரணமானான்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தாங்கள் புலன்விசாரணை செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும், சிறுவனின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் நூற்றுக்கணக்கானவர்கள் ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Exit mobile version