Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறிலங்கா காவல்துறையினரால் தமிழக் கனடியர் ஒருவர் கைது!

கனடா – ரொரன்ரோ பெரும்பாகத்தினை வதிவிடமாகக் கொண்ட 20 வயதுடைய கஜன் ஏரம்பமூர்த்தி என்பவர் சிறிலங்கா காவல்துறையனரால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலத்திரனியல் உபகரணங்கள், வெப்ப உணர்ப்படையில் இலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் யுiஅளூழவ ர்நயவளுநநமநச 3500டி என்பதும் உள்ளடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல குறுவட்டுக்கள், மற்றும் பல எந்திரங்களுக்கு தேவையான பதார்த்தங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பொட்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளிற்கு கொண்டுவரப்பட்டதா என்பதனை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தக் குறித்து -கனேடிய தமிழ் எகாங்கிரஸின் உறுப்பினர் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் கனடிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கைது செய்யப்படும் தமிழர்களின் மேல் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை பிரயோகிப்பது சிறிலங்கா பாதுகாப்புத்துறையினரின் வழக்கமான போக்கு என சுட்டிக்காட்டினார்.

மேலும், கொழும்பில் தமிழர்கள் காரணங்கள் எதுவும் இன்றி கைதுசெய்யப்படுவது சாதாரணமாக நிகழும் ஒரு செயலவாக தற்போது மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, 71 வயதான பற்றிக் பெனான்டஜ் என்பவரையும் சறிலங்கா காவல்துறையினர் கைது செய்திருப்பதாக கனடா ரொரன்ரோவில் வசிக்கும் அவரது மகள் கிறிஜ்ரீனா பெனான்டஸ் கனடிய ஊடகங்களிற்கு தெரிவித்திருக்கிறார்.

தனது தகப்பனாரிடமிருந்து பணத்தினை பெற்றுக்கொள்வதற்காகவே இந்தக் கைது நடந்திருப்பதாக தாம் நம்புவதாக அவா மேலும் குறிப்பிட்டார்

Exit mobile version