
தாங்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்றும், ஆனால் சிறப்பு முகாம்கள் ஏறத்தாழ சிறைக்கூடங்களாக செயல்படும் நிலையில் தங்கள் அனைவரையும் விடுவிக்கவேண்டும் எனக் கோரி கடந்த 22 நாட்களாக செந்தூரன் உண்ணாநோன்பு மேற்கொண்டிருக்கிறார்.நீர் அருந்துவதையும் நிறுத்திவிட்ட அவரை அதிகாரிகள் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவருக்கு தற்போது உணவு குழாய்கள் வழியாக வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டுவருகிறது.
தமது சொந்த அரசியல் வயிற்றுப் பிழைப்பிற்காக ஈழத் தமிழர் குறித்துப் பேசும் இனவாதிகளுக்கு வெளியில் செந்தூரனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து ஜனநாயக முற்போக்கு சக்திகள் அணிதிரளவேண்டும். ஆட்சியிலிருக்கும் இனவாதிகளின் ‘ஈழத் தாய்’ ஜெயா சிறப்பு முகாம் குறித்து மூச்சுக்கூட விடவில்லை.