Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறப்பு முகாம்களை மூடு : தொடரும் செந்தூரனின் உண்ணாவிரதம்

சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் விடுவித்து வேறு திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர் செந்தூரனுக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சீனாவிற்கு எதிராக இந்திய மேலாதிக்கத்தை நிலை நாட்ட இலங்கையில் தலையிடவேண்டும் என இந்திய மேலாதிக்கத்தைக் கோரும் வை.கோவும் உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். செங்கல்பட்டு மற்றும் பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்களில் 47 இலங்கைத் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்றும், ஆனால் சிறப்பு முகாம்கள் ஏறத்தாழ சிறைக்கூடங்களாக செயல்படும் நிலையில் தங்கள் அனைவரையும் விடுவிக்கவேண்டும் எனக் கோரி கடந்த 22 நாட்களாக செந்தூரன் உண்ணாநோன்பு மேற்கொண்டிருக்கிறார்.நீர் அருந்துவதையும் நிறுத்திவிட்ட அவரை அதிகாரிகள் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவருக்கு தற்போது உணவு குழாய்கள் வழியாக வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டுவருகிறது.
தமது சொந்த அரசியல் வயிற்றுப் பிழைப்பிற்காக ஈழத் தமிழர் குறித்துப் பேசும் இனவாதிகளுக்கு வெளியில் செந்தூரனின் உண்ணாவிரதத்தை ஆதரித்து ஜனநாயக முற்போக்கு சக்திகள் அணிதிரளவேண்டும். ஆட்சியிலிருக்கும் இனவாதிகளின் ‘ஈழத் தாய்’ ஜெயா சிறப்பு முகாம் குறித்து மூச்சுக்கூட விடவில்லை.

Exit mobile version