சிரியாவில் அமரிக்க ஆதரவு கிளர்ச்சிப்படைகளுடன் இணைந்து மேற்கு ஊடககங்களுக்குச் செய்திகளை வழங்கிவரும் ஊடகவியலாளர்கள், அலேப்போ பகுதியை முழுமையான கட்டுப்ப்பாடுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்திருந்தனர். அப்பகுதிகளிலிருந்து கிளர்ச்சிப் படைகளுடன் ஒளிப்படங்களை எடுத்து மேற்கின் ஊடகங்களில் வெளியிட்டனர். நேற்று கிளர்ச்சிப்படைகளுக்கு ஆதரவான மேற்கு ஊடகவியாலாளர்களே அலேப்போ பகுதிகளை அரச படைகள் மீண்டும் கையகப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
குறிப்பாக கிளர்ச்சிப்படை ஆதரவு ஊடகங்களில் ஒன்றான , பி.பி.சி கிளர்ச்சிப்படைத் தலைவரை ஆதாரம்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
சிரிய சுதந்திர இராணுவம் (Free Syrian Army (FSA) ) என்ற கிளர்ச்சிப் படைக் கூட்டணி ஆதரவு ஊடகங்களுக்கு அங்கிரிந்து தாம் வெளியேறியிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.