
அமரிக்க அரசு தனது மக்களுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து மூச்சுக்கூட விடாத நிலையில் சிநோடெனை வேட்டையாடுவதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்திவருகிறது. கியூபா, வெனிசூலா ஆகிய நாடுகளையும் சிநோடெனுக்கு அரசியல் தஞ்சம் வழங்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளது. எக்குவடோரியன் அதிபர் சிநோடென் இன்றைய நிலையில் கடவுச்சீட்டு எதுவுமற்ற நிலையிலேயே காணப்படுவதால் அவர் எக்குவாடோரிற்கு பயணம் செய்ய முடியாத நிலையிலுள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார். எக்குவடோரியன் தூதரகம் ஒன்றில் அரசியல் தஞ்ச்ம் கோரினால் அதுகுறித்துத் தாம் பரிசீலிக்க முடியும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.