மட்டக்களப்பில் சிங்கள மக்களை குடியேற்றக் கோரி பயங்கரவாத நடவடிக்கை காரணமாக கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் பௌத்த பிக்குவான அம்பிட்டிய சுமணரதண தேரர் தலமையில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்று தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளும் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிங்களவர்களும் கலந்துகொண்டு தமிழர்களுக்கு எதிரான கோசங்களை எழுப்பியபடி தங்களின் போராட்டத்தை நடாத்துகிறார்கள.