Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிங்கர்களுக்கு எதிராகப் பேசிய சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.

இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசின் உண்மையான நண்பர்கள் தாங்கள்தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கருணாநிதி. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட விவாகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது இனியொரு மீனவன் தாக்கப்பட்டால் கூட இங்குள்ள சிங்களவன் எவனும் உயிரோடு திரும்பிச் செல்ல முடியாது என்று பேசினார் சீமான் சிங்களர்களுக்கு எதிரான இந்தப் பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி போலீஸ் சீமானை கைது செய்து வேலூரில் உள்ள தனிமைச் சிறையிலடைத்தது. இந்நிலையில் நேற்று இரவு சீமானை ஜாமீனில் ஓராண்டுக்கு வெளிவர முடியாத தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டது. சென்னை நகரப் போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சீமானிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கான ஆணையின் நகலையும் சீமானிடம் வழங்கினர். கடந்த வருடம் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இந்திய மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மட்டுமல்ல சிங்களர்களுக்கு எதிராகவோ இலங்கை அரசுக்கு எதிராகவோக் கூட பேச முடியாத நிலை எழுந்துள்ளது.

Exit mobile version