Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிங்கப்பூரில் கைது:இலங்கைப் பெண்ணிடம் குடிவரவு முத்திரைகள்

இலங்கையைச் சேர்ந்த 29வயது பெண்ணொருவரிடம் இருந்து குடிவரவு ரப்பர் முத்திரைகள் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் சிங்கபூர் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடைகளை வைத்திருந்த பொதி ஒன்றில் இரண்டு காற்சட்டைகளில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சிங்கபூரில் குடியிருப்பதை உறுதிசெய்ய கூடிய குவரவு முத்திரைகள் இதில் காணப்பட்டதாக சிங்கபூர் குடிவரவு அதிகாரிகள் கூறியுள்ளனர். சிங்கபூரில் விசா அனுமதி முடிந்த நிலையில் தங்கியிருப்போருக்கு அபராதம், அல்லது 6 மாத சிறைத்தண்டனை, அல்லது மூன்று மாத சிறைத்தண்டனையுடன் மூன்று பிரம்படிகள் தண்டனைகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version