
இனக் கொலையாளியும், அருவருக்கத் தக்க மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவரும், போர்க்குற்றங்களைப் போரின் போது மேற்கொண்டவருமான இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் இந்தப் பதவியை வழங்கியுள்ளது.
இவருக்கு எதிரான நேரடிச் சாட்சிகள் போர்க்குற்ற ஆதராங்களுடன் சனல் 4 தொலைக்காட்சி ஆவணப் படத்திற்கு சாட்சி கூறியிருந்தன.
நாடுகடந்த தமிழீழம் உட்பட புலி சார் அமைப்புக்கள் சவேந்திர சில்வாவிவை அமரிக்கா கைது செய்கிறது என்று தமது ஏகாதிபத்திய விசுவாசத்தால் மக்களை ஏமாற்றி வந்ததன.
இறுதியில் ஒரு சமூக விரோதிக்கு, படுகொலையாளிக்கு இதுவரைக்கும் எந்த இலங்கையச் சேர்ந்தவர்களுக்கும் வழங்காத அதி உயர் பதவியை ஐக்கிய நாடுகள் நிறுவனம் வழங்கிக் கௌரவித்துள்ளது.
உலகில் உரிமைக்காகப் போராடும் அமைப்புக்களை அழிப்பதே அமரிக்காவின் சமாதான முகம் என்று இன்னொரு முறை நிறுவப்பட்டுள்ளது.