
மத்திய கிழக்கில் தீவிர அமரிக்க சார்பு நாடான சவூதி அரேபிய அரசிற்கும் ஆளும் அல் சவூட் குடும்பத்திற்கும் எதிராக மக்கள் எழுச்சிகள் இடம்பெறுகின்றன. கடந்தவாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் சவூதி அரேபிய பாதுகாப்புப் படைகள் குறைந்தது ஐந்து பொதுமக்களையாவது கொலைசெய்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது. கொலைசெய்த பாதுகாப்புப் படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று இன்று வியாளன் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. சவூதி அரேபியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் அமரிக்க அரசும் அதன் ஊதுகுழல்களான ஊடகங்களும் சவூதி அரேபிய அரசின் படுகொலைகள் குறித்து மௌனம் சாதிக்கின்றன.