Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படும் அமைப்புகள்

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படும் அமைப்புகள் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. நாங்கள் இந்த விடயத்தில் வெறுமனே இருக்கவில்லை.
நல்லிணக்கம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியாது என்று அண்மையில் சர்வதேச மட்டத்திலான மூன்று அமைப்புக்கள் கூறியிருந்தன. குறித்த மூன்று அமைப்புக்களும் பிரஸல்ஸ், நியூயோர்க் மற்றும் லண்டன் ஆகிய இடங்களிலிருந்து கொண்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியாது என்ற விடயத்தை ஒரே நாளில் தெரிவித்துள்ளன.
இந்த அமைப்புக்களின் பின்னணியில் சில சக்திகள் செயற்படுகின்றன என்பது தெளிவாக தெரிகின்றது. இது யார் என்பதை விரை வெளியிடுவோம் என்று இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version