Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோவில் கருவறைக்குள் உல்லாசம் கோவில் அர்ச்சகர் கைது !

தமிழகத்தின் காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் உல்லாசமாக இருந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அர்ச்சகர் தேவநாதன் காஞ்சி கோர்ட்டில் சரணடைந்தார்.காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர் காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருந்தார்.கோவில் கருவறையில் அவர் பல பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டு அசிங்கப்படுத்திய செயல் வீடியோ காட்சிகளாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து தேவநாதன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை தள்ளுபடி செய்து விட்டது. அத்தோடு, தேவநாதனையும், அவருடன் உல்லாசமாக இருந்த பெண்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.இதையடுத்து தேவநாதனைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வந்தனர். இந்த நிலையில் தேவநாதன் பெண்களுடன் புரிந்த லீலைகள் அடங்கிய காட்சிகளை சிலர் சிடி போட்டு விற்க ஆரம்பித்ததால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்தது.இந்த நிலையில் நேற்று அர்ச்சகர் தேவநாதன், காஞ்சீபுரம் முதல் வகுப்பு குற்றவியல் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் சுதா முன்னிலையில் சரண் அடைந்தார். தேவநாதன் சரண் அடையும் தகவல் பரவியதும் ஏராளமானோர் அங்கு கூடினர். பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், டி.வி. வீடியோகிராபர்களும் குவிந்தனர்.சரணடைந்த தேவநாதனிடம் பெயர் விவரங்களைக் கேட்டுக் கொண்ட மாஜிஸ்திரேட் அவரை வருகிற 30ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீஸார் காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version