Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோட்டாபயவின் கொலைப்படை ஆயுதங்களுக்குத் தடை :தொடரும் ஏனைய நிறுவனங்கள்

கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இயங்கிவந்த்த தனியார் இராணுவமான ரக்ண ஆகாஷ லங்கா என்ற நிறுவனம் தொடர்பான தொடர்ச்சியான செய்திகள் இனியொருவில் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகின. இந்த நிறுவனத்தின் ஆயுதக் கிடங்கு மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த நிறுவனத்தின் ஆயுதங்கள் பயன்படுத்ததாகக் கிடைத்த முறைப்பாடைத் தொடர்ந்தே ஆயுதக் களஞ்சியம் மூடப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தின் ஒரு பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரக்ண லங்காவின் ஆயுதங்கள் பாவனைக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ரக்ண லங்கா நிறுவனம் மூடப்பட்டதாகத் தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாக ஆயுதங்களைச் சேமித்து வைத்தல் என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. வெள்ளை வான் கடத்தல் உட்பட பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளுக்கு இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் நிலவின.

நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று ஆயுதங்கள் பரிசோதிக்கப்படும் என போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இந்த நிறுவனம் அவன்கார் மரிரைம் -Avant Garde Maritime Services (Pvt) Ltd,- என்ற மற்றொரு இலங்கை நிறுவனத்துடன் இணைந்து சோமாலியக் கடற் பாதுகாப்பு உட்பட பல்வேறு சர்வதேச நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.

பிரித்தானியா இலங்கைக்கு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கிய வேளையில் சோமாலியக் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவே ஆயுதங்களை வழங்குவதாகக் கூறியிருந்தது.

ரக்ண ஆகாஷ லங்காவின் தலைவர்ருடன் கோட்டாபய

அவன் கார்ட் மரிரைம் உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இலங்கையில் போரின் வெற்றியைத் தொடர்ந்து கோட்டாபய தலைமையில் இராணுவ வியாபாரம் உலகமயப்படுத்தப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று ஆயுதங்கள் பரிசோதிக்கப்படும் என போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இந்த நிறுவனம் அவன்கார் மரிரைம் என்ற மற்றொரு இலங்கை நிறுவனத்துடன் இணைந்து சோமாலியக் கடற் பாதுகாப்பு உட்பட பல்வேறு சர்வதேச நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.

பிரித்தானியா இலங்கைக்கு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கிய வேளையில் சோமாலியக் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவே ஆயுதங்களை வழங்குவதாகக் கூறியிருந்தது.

சிசெல்ஸ், மொரிஷியஸ், இலங்கை, கென்யா, தென்னாபிரிக்கா, சூடான், துபாய், கென்யா, தன்சானியா ஆகிய நாடுகளில் நிறுவனங்களைக் கொண்டுள்ள அவன்கார்ட் மரிரைம் கோட்டாபயவின் மற்றுமொரு இராணுவ முதலீடு.

மைத்திரி – ரனில் அரசு ரக்ன லங்காவின் ஆயுதங்களை மட்டும் கையகப்படுத்துவது இனக்கொலை இராணுவத்தின் உலக மயமாதலைத் தடுத்து நிறுத்தாது.

உலக மயமாகிட நவ தாராளவாதப் பொருளாதரத்தின் நம்பிக்கைக்குரிய இலங்கைப் பிரதிநிதி ரனில் விக்ரமசிங்க ரக்ன லங்காவையும் அவன்கார்ட் மரிரைமையும் முற்றாக அழிக்க முற்படுவார் என்பது சந்தேகத்திற்குரியதே.

ரக்ண லங்காவின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கும் அவன்கார் மரிரைம் நிறுவனம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கும் மைத்திரிபால அரசிற்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராட்டங்களை நடத்துவதற்கு இதுவே சந்தர்ப்பம். தேர்தலில் போட்டியிடுவதற்காக திடீரெனக் குதித்த போலி இடது சாரிக் கட்சிகள் எங்கே?

கோட்டாபயவின் கொலைப்படைகள் தொடர்பான முன்னைய தகவல்கள்:

உலகமயமாகும் கோத்தாவின் கொலைப்படைகள் : நிவேதா நேசன்
Exit mobile version