Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொழும்பில் தொடரும் தமிழர்களின் கைதுகள்: ராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது.

கொழும்பின் புறநகரான ஹொரனையி;ல் வைத்து ஒரு வயது குழந்தை உட்பட்ட ஐந்து பேரடங்கிய தமிழ் குடும்பம் ஒன்றை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர் இவர்கள் கல்முனையில் இருந்து திருமணம் ஒன்றுக்காக ஹொரணைக்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதி அமைச்சர் பி ராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது. பேர்த் தோட்டத்தை சேர்ந்த ராஜரட்ணம், கிரிஸ்தோப்பர் பிரிநித் பிரசாலினி, சொலமன் மற்றும் ஒரு வயதான தெசேரா ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள். இதேவேளை எழுதுவினைஞர் சேவைக்கான பரீட்சைக்காக கொழும்புக்கு நேற்று இரவு வந்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை சேர்ந்த 15 இளைஞர்கள் கறுவாக்காட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்
Exit mobile version