Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொலைகாரர்களுக்கு நன்றிபாராட்ட வேண்டும் : டக்ளஸ்

தமிழ்ப் பிரதேசங்கள் முழுவதும் இனச் சுத்திகரிப்பைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனப்படுகொலை இலங்கை அரசு, மனித அவலங்களின் மேல் வாழ்க்கை நடத்துகிறது. திட்டமிட்ட குடியேற்றங்கள், விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பதினைந்தாயிரம் தமிழ்க் கைதிகள், தடுப்பு முகாம்கள் போன்ற அனைத்து மனிதகுல விரோதச் செயல்களையும் கட்டவிழ்த்துவிடும் இலங்கை அரசின் மீதான அரசியல் அழுத்தங்களைத் தடுத்துவரும் சிலருள் டக்ளஸ் தேவானதாவும் ஒருவர். தம்மைக் கொலைசெய்தவர்களுக்கு நன்றிபாராட்ட வேண்டும் என்று அழைப்புவிடுக்கிறார் டக்ளஸ்.

நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் நன்றி பாராட்ட வேண்டுமேன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாசிசவாத பயங்கரவாதத் தலைவர் ஒருவரின் பிடியிலிருந்து தமிழ் சமூகத்தை ஜனாதிபதி மீட்டெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொக்குவில் ஹிந்துக் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சமூகத்தின் சமூக பொருளாதார அபிவிருத்தியை உறுதி செய்வதற்கு ஜனாதிபதி சகல வழிகளிலும் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version