Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பினால் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது!

புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன
புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கபடுகிறது

இக்குழுவில் மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி ஆஸ்ரேலியா, திருமதி சந்திரா மோகன் ராஜ் சுவீஸ்லார்ந்து, சிறிபதி சிவனடியார் யேர்மனி,  பேரின்பநாயகம் கனடா  விமலதாஸ் பிரித்தானியா சார்ல்ஸ் பிரித்தானியா மருத்துவர் அருணகுமார் பிரித்தானியா, கங்காதரன் பிரான்ஸ்,  சிவசக்தி கனடா ஆகியோரே இக்குழுவில் அங்கம் வகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இக்குழுவினர்களின் சந்திப்புக்கான ஒழுங்களை இலங்கை அரசினால் கைது செய்யபட்டு தடுத்துவைக்கபட்டுள்ள புலிகளின் சர்வேதேச பொறுப்பாளர் கே.பி என்று அழைக்கபடும் செல்வராச பத்தமநாதனால் ஒழுங்கு செய்யபட்டதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் ரிபிசிக்கு தெரிவித்தன
THANKS: TBC

Exit mobile version