Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூட்டமைப்பு எம்.பிக்களாக இருந்த பன்னிருவருக்கு இம்முறை கல்தா?

     இதுவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் எம்.பிக்களாக இருந்த 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அரி தாக உள்ளதாகத் தெரியவருகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை கொழும்பில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ,  தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா ,அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,ஈழமக்கள் புரட் சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஷ்பிரேமச்சந்திரன் , ரெலோ அமைப்பின் செயலாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய ஐவரும் கூடி தற் போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்தனர்.

அப்போது அடுத்துவரும் தினங்களில் கட்சித் தலைவர்கள் மீண்டும் ஒன்று கூடி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான பொறிமுறை குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்று இரா.சம்பந்தன் அங்கு கருத்துத் தெரிவித்தர் என அறிய வருகிறது.

இதேவேளை நாடாளுமன்றம் கலைக் கப்பட்டுவிட்டதால் இனிமேல்  நடைபெற வுள்ள புதிய வேட்பாளர் தெரிவு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு இதுவரை எம்பிக்களாக இருந்த 22 பேரையும் அழைக்கும் நடைமுறை பின்பற்றப்பட மாட்டாது என்று கூட்டமைப்பின் உயர் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளைஇ இதுவரை எம்.பிக்களாக  இருந்த எம்.கே.சிவாஜிலிங்கம்இ என்.ஸ்ரீ காந்தாஇ பத்மினி சிதம்பரநாதன்இ செல்வ ராஜா கஜேந்திரன் , சிவநாதன் கிஷோர் , கனகசபை , கனகரட்ணம் ,தங்கேஸ்வரி கதிரமன் , சந்திரநேரு , ஜெயானந்தமூர்த்தி உட்பட குறைந்த பட்சம் 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அந்தத் தலைவர் கோடிகாட் டினார்.

Exit mobile version