Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளம் போராட்டத்திற்கு நிதி எங்கிருந்து வருகிறது : உதயகுமார் பதில்

கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிராகப் போராடுவோரின் பின்புலம், அவர்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பது போன்றவை தொடர்பில் மத்திய அரசு விசாரணைகளைத் துவக்கியுள்ளதாக போராட்டக் குழுவினருடன் அரசு சார்பில் பேசிவருகின்ற மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து போராட்டத்தைத் தலைமை தாங்குபவர்களில் ஒருவரான எஸ்.பி.உதயகுமார் கருத்துத் தெரிவிக்கையில், தாம் உள்ளூரில் மீனவர்களிடமிருந்து கிடைக்கும் பணத்தைத் தவிர ஒரு ரூபா கூட யாரிடமிருந்தும் பெற்றுக்கொள்வதில்லை எனத் தெரிவித்தார். மீனவர்கள், விவசாயிகள், தலித் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நன்கொடையே போராட்ட நிதியாகப் பயன்படுகிறது எனத் தெரிவித்தார். தவிர, போராட்டம் நடத்துவதற்கு அதிக அளவிலான நிதி தேவைப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.

Exit mobile version