Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குவாண்டானாமோ பே அமெரிக்க சிறைச்சாலை:முதன்முதலாக சிறைவாசம் குறித்து கருத்து!

guantanamoகுவாண்டானாமோ பே அமெரிக்க சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சோமாலிய நாட்டை சேர்ந்த மொஹமது சுலைமைன் பர்ரே முதன்முதலாக சிறைவாசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட போது தன்னை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரித்ததாகவும், அதன் பிறகு தன்னை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்று அங்கு கடுமையாக சித்ரவதை செய்ததாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து குவாண்டானாமோ கொண்டு சென்று தன்னை தனிமையில் சிறையில் அடைத்ததாகவும், அங்கு இருந்து வெளியே வந்தது கல்லறையில் இருந்து வந்தது போல இருப்பதாகவும் மொஹமது சுலைமைன் தெரிவித்தார்.

இவர் மீது எந்த குற்றச்சாட்டுகளையும் அமெரிக்கா கொண்டு வரவில்லை.

Exit mobile version