Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கில் பிள்ளையான் – கருணா குழு அச்சுறுத்தல் : TNA வெளியேறியது

வடகிழக்கில் மக்கள் சார் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் இன்னும் நிரப்படவில்லை. இந்த நிலையில் கிழக்கில் பிள்ளையான், கருணா குழுக்களின் வன்முறை தேர்தலின் போது மக்கள் மீதான தாக்குதலாக வெளிப்பட்டிருந்தது. பல கிராமங்களில் பிள்ளையான் குழுவினர் மக்களை வீடு வீடாகச் சென்று மிரட்டியுள்ளதாகத் தெரியவருகிறது. வன்முறைக்கு அச்சமடைந்த பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கச் செல்லவில்லை. தேர்தலுகுப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவான உறுப்பினர்களை பிள்ளையான் – கருணா குழுக்கள் அச்சுறுத்தியதால் அவர்கள் கிழக்கிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களை அணிதிரட்டிப் போராடும் அரசியலுக்கு அன்னியமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்காக வாக்குப் பொறுக்கும் அரசியலை முன்னெடுத்துவருகிறது. பாராளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்குக் கூட மக்கள் எழுச்சியே அடிப்படையானது என மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.

Exit mobile version