Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கில் இரண்டாகப் பகிர்ந்து ஆட்சி நடத்துவோம் : TNA

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியை வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைக் குறிப்பிட்டுள்ளது.ஆட்சிக் காலத்தை இரண்டாகப் பிரித்து முதல் பாதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம், இரண்டாம் பாதியில் கூட்டமைப்பும் ஆட்சி நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி நடத்துவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் இணங்கினால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளத் தயார் என கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Exit mobile version