Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கஷ்மீர் இந்திய அரசின் ஒரு பகுதியல்ல : அருந்ததி ராய்

”ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை” எ‌ன்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்து‌ள்ளா‌ர்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது குறித்து அரு‌ந்த‌தி ரா‌ய் பே‌சிய பே‌ச்சு சர்ச்சையானதை‌த் தொட‌‌ர்‌ந்து, தற்போது இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கு ஒன்றில் அருந்ததி ராய் உரையாற்றினார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருக்கவில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அருந்ததி ராய் அப்போது குறிப்பி‌ட்டு‌ள்ளா‌‌ர்.

Exit mobile version