Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கலைஞர்களுக்கான கலந்துரையாடலும் ….குறும்பட திரையிடலும்

ஈழ தமிழர் திரைப்பட சங்கத்தின் ஏற்ப்பாட்டில் 19.06.2011  மாலை 14.00மணி தொடக்கம்18.00 மணி வரை  இடம்பெற்ற
“கலைஞர்களுக்கான கலந்துரையாடலும் ….குறும்பட திரையிடலும் …”நிகழ்வில் கலஞர்கள் எழுத்தாளர்கள் சமுக ஆவலர்கள்
பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

இந்த நிகழ்வில் கனடா நாட்டில் இடம் பெற்ற (itaff)2011 வருடத்துக்கான சர்வதேச திரைப்பட விழாவில் பிரான்ஸ் நாட்டில்
இருந்து சென்று போட்டியில் தேர்வு செய்யப்பட்ட படங்களுக்கும் வெற்றி ஈட்டிய படங்களுக்கும் கலைஞர்களுக்குமான
சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது
அதனை தொடர்ந்து ..ஈழத் தமிழர் திரை பட சங்கத்துக்கான இலட்சனை அறிமுக படுத்த பட்டது
இந்த இலட்சனையை கனடா நாட்டில் இருந்து வருகை தந்திருந்த (itaff) சர்வதேச திரைப்பட விழா ஒருங்கமைப்பாளர் (திரு .ரதன்)
அவர்களும் நோர்வே நாட்டில் இருந்து வருகை தந்திருந்த இயக்குனர் (திரு .பிரசன்னா )அவர்களும் சேர்ந்து இலட்சனையை வழங்க அதனை
எமது மூத்த கலைஞர் (திரு .ரகுநாதன் )அவர்கள் பெற்றுக்கொண்டு அறிமுக படுத்தி வைத்தார் .
பின்பு திரு .ரகுநாதன் அவர்களின் உரையுடனும் ..குறும்பட திரையிடல் நிகழ்வுடனும் விழா இனிதே
நிறைவு பெற்றது …

Exit mobile version