வினாயகமூர்த்தி முரளீதரன்(கருணா) சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்ப்ட்டுள்ளார். இலங்கையில் ஆளும் சிறீ லங்கா சுதந்திரக்கட்சியில் கருணா தனது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகியதன் சற்றுப் பின்னராக இணைந்து கொண்டார். கருணாவின் இந்த நியமனமானது கட்சியின் உள்ளும் வெளியிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.