தமிழக நடிகர்களுள் கவனிக்கப் பட்ட ஒரு நடிகர் கருணாஸ். அம்பாசமுத்திரம் அம்பானி என்னும் படத்தில் ஹிரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது குடும்பமே கலைக் குடும்பம்தான். இலங்கை அரசு போரின் வெற்றியைக் கொண்டாடும் விதமான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து இந்திய தமிழக நடிக நடிகர்களை அழைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு தன் இனக்கொலை முகத்தை மாற்றும் முயர்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது இலங்கை அரசு.
பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும் தயாராக இருக்கும் தமிழக குழுக்களோ தொடர்ந்து இலங்கைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். இவர்கள் ராஜபட்சேவின் கம்பெனியோடு சேர்ந்து அகதி முகாம்களுக்குச் சென்றூ போட்டோவுக்கும் போஸ் கொடுக்கிறார்கள். அந்த வகையில் இப்போது தமிழக நடிகர் கருணாஸ் குடும்பத்தோடு நான்கு நாள் பயணமாக இலங்கை செல்கிறார். இலங்கை அரசு வானொலி, தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியைச் செய்யவிருப்பதோடு, அகதிகளுக்கும் குத்துப்பாட்டுகளை பாடி ஆட விருக்கின்றனர்.