Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணாநிதி வீட்டு முன் வேலையில்லா இளைஞர் விரக்தியில் தற்கொலை.

சென்னை கோபாலபுரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதின் முதலாவது மனைவியின் வீடு உள்ளது. கருணாநிதி வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் மயங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் கிடந்தார் அங்கிருந்த காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர் அவர் அங்கு உயிரழந்தார். அவரது பெயர் எம். சுரேஷ் வயது 25. பத்தாவது வகுப்புவரைப் படித்துள்ள சுரேஷ் வேலையில்லாமல் வறுமையில் வாடியுள்ளார் வறுமை காரண்மாய் கணவன் மனைவிக்குள் எழுந்த பிணக்கால் அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து விட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் தனக்கு வேலை கேட்டு சுரேஷ் முதல்வர் குறைதீர்ப்பு பிரிவில் இரண்டு முறை மனுக் கொடுத்துள்ளாராம். அங்கிருந்து எவ்வித பதிலும் இல்லாத காரணத்தால் கருணாநிதியிடம் நேரடியாக மனுக் கொடுக்க கோபாலபுரம் சென்ற போது அங்கிருந்த காவலர்கள் அவரை துரத்தி விட்ட்தாகத் தெரிகிறது. வறுமையினாலும் தமிழக அரசின் கண்டுகொள்ளாமையினாலும் கடும் வெறுப்படைந்த சுரேஷ் விஷம் அருந்தி கருணாநிதியின் வீட்டருகே தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version