Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கனிமொழி விடுதலை வேண்டி இந்துக் கோவில் வாசலில் திராவிடக் கட்சி!

ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் இருந்து கனிமொழி விரைவில் விடுதலை பெற வேண்டி, ‘நாத்திக’ கட்சியான திமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள் கோவில் கோவிலாக வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில், கனிமொழிக்காக மொட்டை போட்ட தி.மு.க. ராஜ்யசபா எம்.பி., வசந்தி ஸ்டான்லி காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தார்.

திராவிடப் பாரம்பரியம், சீர்திருத்த்தக் கொள்கை, கடவுள் மறுப்பு, பெரியாரியம் போன்ற சுலகங்களோடு உலாவரும் தி.மு.க இந்துக் கோவிலில் தவம் கிடக்கிறது.
இக்கோவில் கொள்ளைக் காரர்களின் புகலிடம். ஊழல் பேர்வளிகள், அரசியல் வாதிகள், பெரு முதலாளிகள், திருடர்கள், கொலைகாரர்கள் போன்றோர் வழிபாட்டுக்குப் படையெடுக்கும் இந்துக் கோவிலாக இது கருதப்படுகிறது.
கோர்ட் வழக்குகளில் சிக்கித் தவிப்போர், இக்கோவிலில் வந்து வழிபட்டால், வழக்கிலிருந்து விடுதலை பெறுவதாக ஐதீகம் உள்ளது. இதைக் கேள்விப்பட்டு சமீப காலமாக வழக்குகளில் சிக்குவோர், வழக்கறுத்தீஸ்வர்ர் சிறப்பு வழிபாடு நடத்துவது அதிகரித்து வருகிறது.

Exit mobile version