Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கனகரத்தினம் எம்.பி விடுதலை!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரத்தினம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் தற்போது வவுனியாவில் உள்ள அரசாங்க விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அவரை சக நாடாளுமன்ற உறுப்பினரான கிஷோர் சிவநாதன் சென்று பார்வையிட்டுள்ளார்.

எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி பல மாதங்களுக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக கிஷோர் தெரிவித்துள்ளார்.

வன்னியில் நடந்த இறுதிக்கட்ட மோதல்களின்போது அவர் அங்கு சிக்குண்டிருந்தார். சுமார் 12 மாதங்கள் அங்கிருந்த அவர் பின்னர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

Exit mobile version