
அப்போது அவருடன் 15 உதவியாளர்கள் இருந்தனர். இவர்கள் 3 வாகனங்களில் இருந்தனர். அவர்களுக்கு பின்னால் 2 கார்கள் வந்தன. அதில் சயீப் அல்- இஸ்லாமும் மற்றும் 4 பேரும் இருந்தனர். அவர்களிடம் நேட்டோ கூலிப்படை அகமது என்பவர் நீங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள் என விசாரித்தார். அப்போது அவர்களில் ஒருவன் சயீப் அல்- இஸ்லாமை காட்டி இவரது பெயர் அப்துல்கலாம். இவர் ஒரு சமாதான தூதுவர் என்றான். இதற்கிடையே, சயீப் அல்- இஸ்லாமை நேட்டோ கூலிப்படைகள் அடையாளம் கண்டு கொண்டது.
இது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளிவருகின்றன.