Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கச்சைதீவைத் திரும்பப்பெற மோடி நடவடிக்கை எடுக்கிறார்:பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சுசீந்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’இலங்கை தமிழர்கள் முழு உரிமையுடன் கூடிய வாழ்க்கை பெற்று வாழவும், கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை பெற்றுத்தருவதிலும் பிரதமர் மோடி உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மக்களின் எண்ணங்களை மதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் நாற்கர சாலை பொது மக்களுக்கு பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும்’’என்றார்.
இலங்கை இனப்படுகொலை அரசுடன் இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை மோடி அரசு அதிகரித்துவரும் நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் சீமானுடன் இணைந்து புலிப்பார்வை படத்தின் பாடல்களை வெளியிட்ட அதிர்ச்சியில் இவ்வாறு பேசவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version