கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற்றுக்கொள்ளவேண்டும் என என்ற தமிழகத்தின் கோரிக்கைக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. |
நாடாளுமன்ற உறுப்பினர் என் கே சிவாஜிலிங்கம் நேற்று சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த ஆதரவை வெளியிட்டார். இந்தியா கச்சத்தீவை மீளப்பெறுவதன் மூலமே இந்திய மீனவர்களை இலங்கைக்கடற்படையினர் தாக்குவதற்கு முடிவுக்காணமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, கச்சத்தீவை மீளப்பெறுமானால் இலங்கையில் உள்ள தமிழர்களும் மகிழ்ச்சியடைவர் என சிவாஜிங்கம் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், தமிழர்களை முற்றாகத் தமிழ்பிரதேசங்களில் வெளியேற்றி அவர்களைப் படுகொலை செய்வதற்கு முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் |