Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒரே நாளில் 4 மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொலை : ஆந்திராவில் பயங்கரவாதம்

அக். 30-

ஆந்திராவில் மாவோ யிஸ்ட் நக்சலைட் தீவிர வாதிகள் ஆயுதம் ஏந்தி போராட்டங்கள் செய்து வரு கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை கொலை செய் வோம் என்று பட்டியல் தயாரித்து வெளியிட்டனர்.

இதையடுத்து ஆந்திரஅரசு நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியை தீவிரப்படுத்தியது.

இதில் ஆயிரக்கணக்கான நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் நக்சலைட் தலைவர்கள் காட்டுப் பகுதிகளில் தலைமறைவானார்கள். அவர்களை தேடும் பணியில் அதிரடிப்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குண்டூர் மாவட்ட காட்டுப் பகுதிகளில் பதுங்கி இருந்த நக்சலைட் தலைவர் ராமச்சந்திரன், அருணா ஆகியோரை அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். இருவர்மீதும் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன.

இதேபோல் விஜய நகரத்தையொட்டி காட்டுக்குள் தங்கியிருந்த நக்சலைட் தலைவர்கள் மஸ்தான்ராவ், ராமாராவ் ஆகியோரையும் அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

அவர்களிடம் இருந்து நவீன துப்பாக்கிகள், லேப்- டாப் கம்ïட்டர், செல்போன்கள், வெடிபொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

Exit mobile version