
குடியரசு கட்சியின் வேட்பாளர் மிட் ராம்னிக்கும் ஒபாமாவுக்கும் கடும் போட்டி என்று இருந்த நிலையில், இழுப்பறி இருக்கும் என உலகமே எதிர்பார்த்தது. மேலும் அமெரிக்க பொருளாதாரம் தொடர் சரிவை சந்தித்து வரும் இக்கட்டான நேரத்தில் ஒபாமாவின் வெற்றி குறித்து பெருத்த சந்தேகம் இருந்தது.இந்நிலையில் ஒபாமாவின் அபரிமிதமான வெற்றிக்கான செய்தி வெளியானது. தீவிர வலது அடிப்படைவாதியான ரோம்னியின் தோல்வி அடிப்படை வாதத்தை மக்கள் நிராகரிப்பதைக் காட்டுக்கின்றது. இரண்டு வேட்பாளர்களைத் தெரிவு செய்யும், வேறு தெரிவுகளற்ற நிலைக்கு மக்கள் நெருக்கப்பட்டிருந்த வேளயில், குறைந்தபட்சம் அடிப்படைவாடதக் கருத்துக்களையாவது முன்வைக்காத ஒபாமா தெரிவானார்.
வெற்றியின் பின்னர் உலகம் முழுவதையும் ஜோர்ஜ் புஷ் ஐத் தொடர்ந்து இராணுவமயமாக்கிய, அமரிக்காவை போலிஸ் அரசாக்கிய தனது கடந்தகால அரசியல் சரியானதே என்று ஒபாமா கூறினார்.