Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டே தீருவோம் : அமைச்சர் வீரவன்ச

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்பான நிலைப்பாட்டில் தான் தொடர்ந்தும் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் அரசாங்க அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் அழுத்தங்கள் எதுவும் பிரயோகிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவை கலைப்பதற்கான முடிவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுக்கும்வரை இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை சுற்றிவளைக்குமாறும், அங்குள்ள உத்தியோகர்த்தர்களை தடுத்து வைக்குமாறும் பொதுமக்களிடம் கடந்த வாரம் விமல் வீரவன்ஸ கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் 3 பேரைக் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பதானது, இலங்கைத் தலைவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் ஆரம்பகட்ட நடவடிக்கை என்றும் விமல் வீரவன்ஸ இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

Exit mobile version