Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக ஐதராபாத்திலிருந்து மாணவர்கள் : போலிஸ் தகவல்

isis-terroristsஐதரா பாத்தைச் சேர்ந்த ஒரு மாணவி உள்பட மேலும் 15 மாணவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர விரும்பி உள்ளனர் என்றும்அவர்களை தெலுங்கானா போலீசார் சமரசம் செய்து மேற்கு வங்காளத்தில் இருந்து அழைத்து வந்ததாகவும் கூறுகின்றனர். உலகம் முழுவதும் அமெரிக்க அரசின் திட்டப்படி இஸ்லாமியத் தீவிரவாதம் கட்டவிழ்த்துவிடப்படிகின்றது. இதன் பின்புலத்தில் உலகம் இராணுவ மயமாக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு மக்களை அதனை நோக்கித் திசைதிருப்பி விட்டு பல்தேசிய நிறுவனங்கள் எதிர்ர்பின்றிக் கொள்ளையடிக்க வழிசெய்து கொடுக்கபடுகிறது.

ஐதராபாத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண் உள் பட 15 மாணவர்களை காணவில்லை என்று அவர்களது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர், போலீஸ் விசாரணையில் அவர்கள் கொல்கத்தாவில் இருப்பது தெரிய வந்தது. தெலுங்கானா போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர கொல்கத்தாவில் இருந்து ஈராக் செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மறுபக்கம் இன்னும் வெளியாகவில்லை. ஐ,எஸ்.ஐ.எஸ் இற்கு ஆட்சேர்த்துப் பயிற்றுவித்தது அமெரிக்க உளவு நிறுவனங்களே என ஸ்நோடென் வெளியிட்ட ஆவணங்கள் உடப்ட பல்வேறு ஆதாரங்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version