
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பிரஞ்சுப் பிரதிநிதி இலங்கை அரசின் போர்க்குற்றங்களை இலங்கை அரசே விசாரணை செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இலங்கையில் சீன-இந்திய முதலீடுகளுக்கு எதிரான நடவடிக்கையாக இவ்வழுத்ங்கள் எதிர்பார்க்கபட்டாலும் இதற்கான துருப்புச் சீட்டாக நிபுணர் குழுவின் அறிக்கை பயன்படுத்தப்படும் என்பது வெளிப்படையானது.
இதே அமரிக்கப் பிரதிநிதி ரொபேர்ட் ஓ பிளக்கின் இலங்கை வருகையைத் தொடர்ந்த இலங்கை அரசின் அமரிக்க ஆதரவு நிலைப்பாடுகள் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்விரு நாடுகளும் ஐக்கிய நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கையை முதல் தடவையாக எச்சரித்துள்ளன.