Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐரோப்பாவில் 19.2 மில்லியன் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை : மேதினத் தகவல்

Unemployment-in-Europeஐரோப்பாவில் வேலையற்றோர் தொகை 12.1 வீதத்தால் அதிகரித்துள்ளது. மே தின அறிவிப்போடு அதிர்ச்சிதரும் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் இத்தகவல் வெளியாகியுள்ளது. 19.2 மில்லியன் தொழிலாளர்கள் அரசின் மானியத்தைப் பெற்றுக்கொள்பவர்களாக உள்ளனர். ஐரோப்பாவில் இந்த மானியத் தொகையில் அரசுகள் வெட்டுக்களை அறிவித்துள்ளதால் வேலையற்றோரின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள 17 நாடுகளிலும் வேலையற்ற இளைஞர்களின் தொகை 24 வீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செயலிழந்து போன வங்கி- நிதி மூலதனம் மீண்டும் தலையெடுக்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. இதற்கெல்லாம் எதிராக மக்களின் போராட்டங்களைத் தடுக்கும் வகையில் பயங்கரவாதத்தைக் காரணம்காட்டில் மக்களைக் கண்காணிக்கும் பொறிமுறைகளை ஐரோப்பிய அரசுகள் ஏற்கனவே உருவாக்கிவிட்டன. அழிந்துபோகும் இந்த அரசுகளை மிளமைக்கும் புதிய பொருளாதார ஒழுங்கமைவில் மலிவான கூலி அடிமைகளை ஐரோப்பாவின் உள்ளேயே பல்தேசிய நிறுவனங்களுக்காக இயங்கும் அரசுகள் உருவாக்க முனைகின்றன. மலிவான அடிமைகள் உருவாக்கப்பட்ட பின்னர் மூன்றாமுலக நாடுகளிலிருந்து உற்பத்தி நிறுவனங்களை ஐரோப்பாவை நோக்கிக் கவர்வதற்கான திட்டமிடலை ஐரோப்பிய அர்சுகள் வகுக்க ஆரம்பித்துவிட்டன.

Exit mobile version