Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐக்கிய தேசியக் கட்சிக்கு சரியான முடிவைக் கொடுத்திருப்பேன் : நிழல் உலக அமைச்சர்

ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாகிகள் தெரிவு வாக்கெடுப்பில் இடம்பெற்ற இரகசியத்தை விரைவில் அம்பலப்படுத்துவேன் என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய வாக்கெடுப்பு முடிவுகள் மாறி அமைந்திருந்தால் அந்தக் கட்சியைச் சேர்ந்த சுமார் 15 பேர் ஆளும் தரப்பிற்கு மாறியிருப்பர் .என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை அடித்து நொறுக்கியது பிழையானதொரு விடயம். என தெரிவித்த அவர், கட்சிக்குள்ள ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் தன்னிடம் முறையிட்டிருந்தால் அதற்குரிய சரியான தீர்வைக் கொடுத்திருப்பேன் என்றும் அமைச்சர் மேர்வின் இன்று செவ்வாய்கிழமை(20.12.2011) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version