Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எவரை இலங்கை மக்கள் தெரிவு செய்கிறார்களோ அத்தலைவர்களுடன் இணைந்து செயற்படுவதை இந்தியா எதிர்பார்த்திருக்கிறது!:இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கை மக்களுக்கு நாளை (இன்று) மிகவும் முக்கியமான தினமாகும். ஜனநாயகம் இறுதியில் வெற்றிபெற்றிருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று திங்கட்கிழமை கூறியுள்ளார்.

தமது விருப்பத்திற்கு இணங்க அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்காக இலங்கை மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எவரை இலங்கை மக்கள் தெரிவு செய்கிறார்களோ அத்தலைவர்களுடன் இணைந்து செயற்படுவதை இந்தியா எதிர்பார்த்திருக்கிறது என்று கிருஷ்ணா நேற்று தெரிவித்ததாக

ஏ.என்.ஐ. செய்திச் சேவை குறிப்பிட்டது.இலங்கையில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நேற்று கருத்துத்தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கையில் இறுதியாக ஜனநாயகம் வெற்றியீட்டியிருப்பதையிட்டு இந்தியா மகிழ்ச்சியடைகிறது என்று கூறியுள்ளார்.

Exit mobile version