Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எத்தனை சட்டம் போட்டாலும் ஈழ மக்களுக்காக பேசிக் கொண்டே இருப்போம்- நெடுமாறன்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி மீண்டும் அரசின் அடக்குமுறை ஈழ விடுதலை ஆதரவாளர்கள் மீது ஏவப்படுகிறது. ஆங்காங்கே ரயில் தண்டவளத் தகப்புகளும், அவசரமாக கருப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர கருணாநிதி துடிப்பதும் இதையே நமக்கு உணர்த்துகிற நிலையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், கோவையில் செய்தியாளர்களிடையே பேசும் போது, இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற போர்க்குற்றவாளி ராஜபக்சே. அந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் பேசினால் தடை போடுகிறார்கள். தமிழக அரசு மினி சட்டம் என போலீசாரை ஏவி புறட்டுகிறது. என்னதான் சட்டம் போட்டாலும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக என்றும் பேசிக்கொண்டேதான் இருப்போம். அதேபோல் போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் போன்ற வகையில் எங்கள் எதிர்ப்புகள் இருந்துகொண்டேதான் இருக்கும் என்று பேசினார்.

Exit mobile version