Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எங்கள் மாநில பெண்களைத் தொட்டால் கைகளை வெட்டுவோம் : ராஜ் தாக்கரே

raj_thakreஎங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கத் தொடுபவர்களின் வெளி மாநிலத்தவர் கைகளை வெட்டுவோம் எனவும் கைகளை வெட்ட கட்சித் தொண்டர்கள் தன்னிடம் அனுமதிபெறத் தேவையில்லை எனவும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் ‌தாக்கரே என்ற இந்து அடிப்படைவாதி தெரிவித்துள்ளார். இந்து பாசிசத்தையும், பிரதேச வெறி, சாதி வெறி போன்றவற்றையும் மக்கள் மீது திணித்து அதனை வாக்குப் பொறுக்குவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ராஜ் தாக்கரே போன்ற பயங்கரவாதிகள் திடீர் என உலகம் முழுவதும் உருவெடுக்கிறார்கள்.
மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாத இவர் போன்ற பாசிஸ்டுக்கள் குறுகிய அடையாள வெறியைத் தூண்டுவதன் ஊடாக வன்முறையைத் தூண்டி தம்மைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள்.
ராஜூ பஸ்வான் என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் மகாராஷ்டிராவை சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதற்காக கைது செய்யப்பட்டான்.

இந்த சம்பவத்தை மேற்கொள் காட்டி மகாராஷ்ரடிரா மாநிலம் கோல்காபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் ‌தாக்கரே, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் தான் காரணம் என்று குற்றம் சுமத்தொய இந்து பாசிஸ்டான இவரின் இந்து அடிமைத்தனத்திற்கும் பாலியல் வெறிக்கும் பலியான பெண்களே அதிகம்.

Exit mobile version