Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எகிப்து தலைநகர் கெய்ரோ சென்ற ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் மீது கல்வீச்சு தாக்குதல்

எகிப்து தலைநகர் கெய்ரோ சென்ற ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது.

கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பான் கீ மூன் பங்கேற்றார்.

பின்னர் அங்கிருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச் செல்ல அவர் வெளியே வந்தபோது, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களால் பான் கீ மூன் மீது கற்கள் வீசப்பட்டன.

அத்துடன் பான் கீ மூனுக்கு எதிரனா கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர் எனினும் இந்த தாக்குதலில் பான் கீ மூனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் அவர் மீண்டும் அரபு லீக் தலைமையக கட்டிடத்திற்கு உள்ளே அழைத்து செல்லப்பட்டு, மற்றொரு வாசல் வழியாக கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version