அலுத்கமவிலிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் இன்று காலைவரை முஸ்லீம்கள் பள்ளிவாசலுக்குள்ளேயே இருப்பதாகவும், ஊரடங்கு உத்தரவு அமுலிலிருந்த வேளையில் அரச படைகளின் ஆதரவுடன் சிங்கள பௌத்த பயங்கரவாதிகளால் முஸ்லீம்களின் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன எனவும் தெரியவருகிறது.
அதே வேளை மூன்று முஸ்லீம்கள் அரசபடைகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகவும் தெரிவிகப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் முஸ்லீம்கள் மீதான நாடு தழுவிய இன வன்முறை ஒன்றைத் திட்டமிடுவதற்கான அறிகுறிகளே இவை.